என் காதல்…‘ஒரு’ தலையாகவே …
இருந்துவிடட்டும்
அதனால்தான்
இன்னும் சொல்லவில்லை
என் காதலை.
நீ சம்மதம்
சொல்லிவிட்டால்
‘இரு’ தலைக் காதலாம்
எல்லோரும்
சொல்கிறார்கள்;
வார்த்தையில்கூட
நாம் இருவரென்ற
பிரிவெதற்கு…
‘ஒரு’ என்ற வார்த்தைக்குள்
ஒன்றாகவே
இருந்திடுவோம்.
இனியும் சொல்லப்போவதில்லை
என் காதலை…
‘ஒரு’ தலையாகவே
இருந்துவிடட்டும்…



No comments:
Post a Comment