பறிக்கின்ற போது மரிக்கின்ற மலர்கள் தெளிக்கின்ற கண்ணீர் உணர்வதில்லையாம் ஒருவருமே ...அது போல் - உன் வெறுக்கின்ற பார்வையில் வெடிக்கின்ற - என் இதய ஒலிகள் அறியமாட்டாயா? நீ!
பிரிந்து விட்டதால் முடிந்து விட்டது என்று நினைத்து விட்டாள் அவளுக்கு எங்கே தெரிய போகிறது "என் இதயத்தின் வலி" துடிக்கும் போதல்லாம் கேக்கிறது என் இதயம் "இனி உன்னால் நிம்மதியாக வாழ முடியுமா என்று"
உன்னை மறக்க நினைக்கிறேன், நம் காதல் நம் கண்முன்னே வருகிறது நம் காதலை மறக்க நினைக்கிறேன், உன் முகம் என் கண்முன்னே வருகிறது இரண்டையும் மறக்க நினைக்கிறேன், மரணம் கண்முன்னே வருகிறது..