Thursday, June 10, 2010

வாழக்காத்திருக்கும்..


உன் ஓர் வார்த்தையில்
வாழக்காத்திருக்கும்
எனக்காக ஏன் நீ
வாழவே மாட்டேன் என்கிறாய்
என்னுடன்...

இதய ஒலிகள்


பறிக்கின்ற போது
மரிக்கின்ற மலர்கள்
தெளிக்கின்ற கண்ணீர்
உணர்வதில்லையாம்
ஒருவருமே
...அது போல் - உன்
வெறுக்கின்ற பார்வையில்
வெடிக்கின்ற - என்
இதய ஒலிகள்
அறியமாட்டாயா?
நீ!

Friday, June 4, 2010

என் இதயத்தின் வலி


பிரிந்து விட்டதால் முடிந்து விட்டது என்று நினைத்து விட்டாள்
அவளுக்கு எங்கே தெரிய போகிறது "என் இதயத்தின் வலி"
துடிக்கும் போதல்லாம் கேக்கிறது என் இதயம் "இனி உன்னால் நிம்மதியாக வாழ முடியுமா என்று"

Tuesday, June 1, 2010

மறந்து விடாதே...


என்னை
மறக்க
வேண்டும்
என்று நினைக்கும்
ஒவ்வொரு நிமிடங்கள் ’இலும் ,
என்னை நினைக்கிறாய்
என்பதை மறந்து விடாதே …

மறக்க வேண்டும்,....


தோல்வி எனக்கு புதிதல்ல
அதனாலதான் அவளை
மறக்க வேண்டும்
என்று நினைக்கும் போது கூட
என் மனதோடு போராடி தோற்று போகிறேன்..

கண்முன்னே.....


உன்னை மறக்க நினைக்கிறேன்,
நம் காதல் நம் கண்முன்னே வருகிறது
நம் காதலை மறக்க நினைக்கிறேன்,
உன் முகம் என் கண்முன்னே வருகிறது
இரண்டையும் மறக்க நினைக்கிறேன்,
மரணம் கண்முன்னே வருகிறது..